Friday, October 22, 2010

குறுஞ்செய்தி

தாஜ்மகால்
துக்கத்தின் நிறம்
கருப்பு என்றிருந்தேன்..,
இத்தனை நாள்..,
உன்னைக்
கண்டப்பிறகுதான்
வெள்ளை என்றுணர்ந்தேன்,

காதல்:
கண் இல்லாததாய்
வேண்டாம்..,
கண்ணீர் இல்லாததாய் வேண்டும்.

கோரிக்கை:
இதயத்தில்
ஊஞ்சல் கட்டி,
நித்தமும் ஆடுபவளே...,

நிறுத்திவிடாதே
உன் ஆட்டத்தை..
நின்றுவிடும்
என் ஓட்டம்.


No comments:

Post a Comment