Monday, September 06, 2010

எது காதல் தெரியவில்லை?

என் தனிமையின்
போதெல்லாம்-நம்
இதழ் வருடிய வார்த்தைகளையே
அசைப்போடுகிறதே இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் நீ
அகப்பட்டுக் கொண்டால்-என்
அகம் வதைப்படுகிறதே அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி-நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ இல்லாதபோதும்
உன்னுடன் உறவாடி மகிழ்கின்றேனே
இதுதான் காதலா?

எனக்காக நீ தந்தவைத் தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட-நீ
வருடிய அனைத்தையும் சேகரிக்கின்றேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும் இல்லை என்ற  ஒன்றை
நீ கேட்க நினைக்கும்போதே
 கொடுக்கத் தோன்றுகிறதே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு- நம்
விழிகளில் நீர் நிரப்பிச்  செல்கிறதே
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்றபோது
நீ மட்டும் மறுக்கிறாயே
நாங்கள் நண்பர்களென்று.....,

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...,
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment