Wednesday, September 01, 2010

மரணத்தையும் தாண்டும் காதல்

விழி மூடும் மெல்லிசையில்
உதட்டோரப் புன்னகையில்
மென்மையாய் வருடிச் செல்லும்
உன் நினைவுகள்....,

என் மரணத்தோடு மடிந்துவிடுவதில்லை,
நம் காதல்.
என் மரணம் தாண்டியும் அது வாழும்..,

உன்னையும், என்னையும் போல்....,
எத்தனையோ ஜீவன்கள்....,
நிஜத்தையே காணமுடியாத
நிழல்களாய் போனாலும்,
நினைவுகளின் உயிர்குடித்தபடி
வாழ்வதால்தான்.......,
வாழ்கிறது
வாழ்வும்,உலகமும் .....,

No comments:

Post a Comment