Wednesday, September 01, 2010

ஒரே நிழல் ஒரே பாதச்சுவடு

அந்திவானம்
அலையில்லாக் கடலை அனைத்து
சிவப்பை பூசிக்கொள்ள
அதைக்கண்ட நானும் சிவந்தேன்
நீ அருகில் இருப்பதாலேயே..,

அசுர அலைகள் நடுவே
தத்தளிக்கும் படகாக நான்!
கருவண்டின் இருளில்
ஆழ்கடல் அமைதியாக நீ.
கண்ணீரால் உயர்த்துகிறது
கடல்மட்டத்தை படகு.

உன் வலையில் வலிய
சிக்கிய மீனாக நான் இருக்க,
என்னை வலையில் சிக்கிய
சிப்பிக்குள் முத்தாய்
நீ கருதினாயே

அன்று,
கடற்கரையில் நாம் இருவர் நடந்தும்
ஒரே பாதசுவடுதான்!!!!!!,
மாலை வெய்யிலில் நாம் இருவர் அமர்ந்திருந்தும்
ஒரே நிழல்தான்!!!!!

இன்றும்,

ஒரே பாதசுவடுதான்,
ஒரே நிழல்தான்!!
ஆனால்,
தனிமையில் நான்......,

No comments:

Post a Comment